Saturday, February 21, 2009

பல்கலைக்கழக சேவையிலிருந்து ஒய்வு பெறும் பேராசிரியர் சி.மெளனகுரு


பேராசிரியர் மெளனகுரு பல்கலக்கழகச் சேவையிலிருந்து ஒய்வு பெறுகிறார் அறுபத்தியைந்து வயதை கடந்தாலும் இன்றும் துடிப்புடன் பணிபுரிக்கின்ற ஒருவராகவே காணப்படுகிறார்.அவர் அடிக்கடி குறிப்பிடுகின்ற உழைப்பு என்ற சொல் அவரது பல்கலைக்கழக வாழ்வுக்கு உதாரணம்.இதுவரை வெளிவந்த நூல்களின் பட்டியல் அவரது உழைப்புக்கு சிறந்த உதாரணம். 20ம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்(1984),சடங்கிலிருந்து நாடகம் வரை (1985), மௌனகுருவின் மூன்று நாடகங்கள்(1985),தப்பி வந்த தாடி ஆடு(1987)பழையதும் புதியதும்- நாடகம் அரங்கியல்(1992),சுவாமி விபுலானந்தர் காலமும் கருத்தும்(1992),சங்காரம்- ஆற்றுகையும் தாக்கமும்- (நாடகம்)(1993),ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு(1993),கால ஓட்டத்தினூடே ஒரு கவிஞன் -நீலாவணன்(1994),கலை இலக்கியக் கட்டுரைகள்(1997),சக்தி பிறக்குது - நாடகம் (1997),பேராசிரியர் எதிரிவீர சரத்சந்திராவும் ஈழத்து நாடக மரபும்(1998), இராவணேசன் -நாடகம்(1998), மடக்களப்பு மரபுவழி நாடகங்கள்(1998), அரங்கு ஓர் அறிமுகம் -இணை ஆசிரியர்(2000), சுபத்திரன் கவிதைகள் (தொகுப்பாசிரியர்) (2001), வனவாசத்தின் பின் நாடகம் (2002),மட்டக்களப்பு தமிழகத்தில் இந்துப் பண்பாடு -பதிப்பாசிரியர் (2003),அரங்கியல்(2003), ஈழத்துத் தமிழ் நாடக அரங்கு (2வது திருத்திய பதிப்பு)

கிழக்கின் புலமைசார் மரபில் பேராசிரியருடைய இடம் முக்கியமானது.கிழக்குப்பல்கலக்கழகத்தின் வளற்சியில் பேராசிரியர் மிகுந்தபங்களிப்பாற்றியுள்ளார்.குறிப்பாக கலைப்பீடம் அவரை மறக்க முடியாது.

இந்த சந்தற்பத்தில் பல்கலக்கழமும் கலைப்பீடமும் செய்ய்யக்கூடிய கடமை என்னவென்றால் அவருக்கு வாழ் நாள் பேராசிரியர் பட்டம் கொடுத்து கெளரவிக்க வேண்டும்.

பாலசுகுமார்

முன்னாள் பீடாதிபதி

கலை கலாசார பீடம்

கிழக்குப் பல்கலைக்கழகம்

No comments: